செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சோமாலியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு – 21 பேர் பலி

சோமாலியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு – 21 பேர் பலி

0 minutes read

கடுமையான வறட்சி நிலவும் நாடுகளுள் ஆபிரிக்காவில் உள்ள சோமாலியா ஒன்றாகும். இங்கு கடந்த 2 வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது.

இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள், பாடசாலை கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

1 இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More