Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மும்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 35 கடற்கொள்ளையர்கள்

மும்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 35 கடற்கொள்ளையர்கள்

1 minutes read

செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது.

இந்த நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கடத்தப்பட்ட பங்களாதேஷ் சரக்கு கப்பல் கடந்த 14ஆம் திகதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்தது.

இதன்போது, அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது கப்பலின் நடவடிக்கைகளை கவனித்து வந்த இந்திய போர்க்கப்பலுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, 15ஆம் திகதி குறித்த சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கொள்ளையர்களை சரணடையுமாறு இந்திய கடற்படையினர் எச்சரித்தனர்.

அதைத்தொடர்ந்து, கொள்ளையர்கள் மற்றும் இந்திய கடற்படை வீரர்களுக்கும் இடையில் சுமாா் 40 மணி நேரம் இடம்பெற்ற சண்டைக்கு பிறகு சரக்கு கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், கப்பலில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 17 பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் கடற்கொள்ளையர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More