மர் ஒர்வன் (MARR ORPHAN)னால் “குழந்தைகள் தினம்” கார்த்திகை 22 ந் திகதி 2014 ஆண்டு மன்னாரிலுள்ள YMCA மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. நெதர்லாந்திலிருந்து திரு. ஜெர்ட் என்பவர் 2001 லிருந்து ஒவ்வொரு வருடமும் வருகை தந்து நத்தார் பரிசில்களை வழங்குவதோடு அவர்களின் கல்வி முன்னேற்றம் பற்றி ஆய்வும் செய்வார்.
மேலும் இவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள 80 க்கு மேற்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு அவர்களின் மாதாந்த படிப்புச் செலவுக்கு உதவி செய்வதோடு 20 மாணவர்களுக்கு அவர்களின் பல்கலை கழக படிப்புக்கும் உதவி புரிந்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் வேறு பல பாடசாலைகளிலுள்ள 125 ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அவர்களின் படிப்புச் செலவுக்கு உதவி வழங்கி வருகின்றனர். அத்துடன் தொலை தூரமுள்ள பாடசாலைகளில் பணி புரியும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் மாதாந்த வெகுமானம் வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
திரு. சின்கிலேயர் பீற்றர் | மன்னாரிலிருந்து வணக்கம் லண்டனுக்காக