Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? | பகுதி 1 ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? | பகுதி 1

ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? | பகுதி 1 ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? | பகுதி 1

3 minutes read

எதை எதையோ படிக்கின்றோம் பார்க்கின்றோம் இணையதளங்களில் சமூக வலைதளங்களில் இது போன்ற தகவல்களையும் கொஞ்சம் படித்து பாருங்கள்

“தான் பரம தரித்திரன் என்ற மன நிலையில் வாழ்பவன் தன் மனித நிலையை அறியவோ, உணரவோ முடியாது. ஒருவன் பொருளாதார நலன்களைப் பெற்றாலன்றி அவனுடைய மனித உரிமைகளை மேற்கொண்டு வாழ இயலாது” – டாக்டர் அம்பேத்கர்.இந்திய நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் எண்ணிக்கை 10,42,81,034 ஆகும். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 7,94,697 (2011) இவர்களில் பெரும் பகுதியானவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பத்து கோடிக்கு மேற்பட்ட இம்மக்கள் குறித்து அரசும், அதிகார வர்க்கமும் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் விடு தலை பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகும்கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் இம்மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் இம்மக்கள் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் இதுகாறும் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளே!நிலப்பிரபுக்கள், மேல் சாதிஆதிக்க வெறியர்கள், காண்ட்ராக்டர்களால் இம்மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானாலும், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை யினராலேயே மிக அதிகமான ஒடுக்கு முறைகளுக்கும், கொடுமைக்கும் உள்ளாக் கப்படுகின்றனர்.

உயிர் வாழும் உரிமை மனிதஉரிமைகளில் எல்லாம் முதன்மையான தும் மிகவும் புனிதமானதும் ஆகும். உயிர்வாழும் உரிமை என்பது ஏதோ மிருகம்போல் உயிருடன் இருப்பது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன்மானத்து டன் உயிர் வாழ்வது என்றே பொருள்படும். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் “சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும்“ ஆகும். இதை இந்தியஅரசியலமைப்புச் சட்டமும் உறுதிசெய்கிறது. பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர்.

இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை.பின்னர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி துவங்கி 2005 வரை `மக்களிடமிருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்துத் தளத்திலேயே அரசின் வனக்கொள்கைகளும் சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தன.’பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டன.பழங்குடி மக்கள் காட்டை தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாக பயன்படுத்த ஆரம்பித்தது. 1854ம் ஆண்டு வெளி யிடப்பட்ட வனக்கொள்கை இதை வெளிப்படுத்தியது. “இந்திய வனச்சட் டம் 1927” மூலம் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது.

இத்தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத் தையும் சீர்குலைத்து சின்னாபின்ன மாக்கிவிட்டது.ஆதிவாசிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டது; காடுகளிலிருந்து அவர்கள் விரட் டப்பட்டனர். தாங்கள் தெய்வமாக வணங்கி பாதுகாத்த வனம் அழிக்கப்படுவது கண்டு கிளர்ந்தெழுந்த மக்களை ஒடுக்க 1871ல் குற்றப் பழங்குடியினர் சட்டம் பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது (Criminal Tribe Act) இச்சட்டத்தின் கீழ் 150 ஆதிவாசி குழுக்க ளைக் குற்றவாளிகளாக்கி பட்டியலிட்டது. சென்னை மாகாண குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911ம் ஆண்டு இயற்றப்பட்டது. 87 இனக் குழுக்களும் 3 கேங்குகளும் இதில் பட்டியலிடப்பட்டன. இனக்குழுக்களைக் குற்றவாளிகளாக்குவது பிரிட்டிஷ் ஆட்சி யில்தான் நடந்தேறியது. பரம்பரையையே குற்றவாளிகளாக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றது.

குறிப்பாக முத்துராமலிங்க தேவர், பி.ராம மூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி னர். 1952ம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப் பட்டது. ஆனால், இதற்குப் பதிலாக “வழக்கமாக குற்றத்தை மீறுவோர் தடுப்புச் சட்டம் (Habitual Offenders Restriction Act) என்ற பெயரில் 1959ம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி முன்னாள் குற்றம்பரம்பரையினரைப் பிடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். குற்றப்பின்னணி உள்ளவர் கள் என்ற காரணத்தைக் கற்பித்து பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு, குற்றத்தை ஒப்புக் கொள்ள கட்டாயப் படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது, குடும்பத்துப் பெண்கள் அதிகாரிகளுக்கு இரையாக்கப்படுவது. உயிர் பறி போகும் காவல்நிலைய மரணங்கள் போன்ற கொடூரமான நடவடிக்கையில் காவல்துறையினரும், வனத்துறை யினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முறை பிடிபட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் காவல்துறையால் அவர் கைது செய்யப்படுவார். மீளவே முடியாது.

இவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டார்களா இல் லையா என்பதைவிட இவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பதே குற்றம் சுமத்த வும், கைது செய்யவும் போதுமானதாய் இருக்கிறது. குறிப்பாக குறவர், இருளர், கல் ஒட்டர் போன்ற சமூகத்தினர் இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின் றனர். அதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாக குற்றவாளிகள் என முத்திரை குத்தி கொல்லவும் முடியும். இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு, பொருளாதார மேம்பாட் டுக்கு எதுவும் செய்யாதவர்கள், குற்றம்சுமத்த மட்டும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். மற்றவர்களை குற்றவாளி என்று கூறுவதன் மூலம் தங்க ளைக் குற்றமற்றவர்களாகவும், நீதிமான் களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.

இதுஒருபுறமிருக்க, ஆதிவாசி மக்கள் பெரும்பகுதியானவர்களின் வாழ்வாதாரம் நிலம் சார்ந்ததாகும். மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், இடதுசாரிகள் ஆண்ட மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தவிர வேறுமாநிலங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஆதிவாசிகளுக்கு நிலம் வழங்க வில்லை. மாறாக, நிலம் வெளியேற்றம்தான் நடைபெற்றுள்ளது. நிலவெளியேற்றத்தை மேலும் தீவிரமாகவும், சட்டப்பூர்வ மாகவும் செய்யும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற் றும் மறு குடியமர்த்தல் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்களுக்கு மேலும் பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டுள் ளது.

சிறப்பு பொருளாதார மண்டலம், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல், அந்நிய கம்பெனிகளுக்கு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஆதிவாசி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்தும், குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப்படுகின்றனர்.

 

 

தொடரும்…..

 

 

 

நன்றி : பெ.சண்முகம் | இன்று ஒரு தகவல்

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More