March 26, 2023 9:44 am

பகுதி 2 | ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ? பகுதி 2 | ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறை | இவர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா ?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வன உரிமைச் சட்டம் 2006

“பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள் (காடு களின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006 “ டிசம்பர் 13, 2006 அன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதற்கான விதிகள் 2008 ஜனவரி 1 முதல் அரசிதழில் வெளி யிடப்பட்டு சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தை முறையாக அமல் படுத்தினால் வனநிலங்களில் பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு அந்நிலத்தின் மீது உரிமைகள் வழங்கப் படும். வனத்தில் விளையும் வன சிறு மகசூல் சேகரிப்பது, விற்பது மக்களின் உரிமையாகும்.

வேட்டையாடுவதைத் தவிர பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் மக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமே இயற்றப்பட்டாலும், அதைத் தருவதற்கு அதிகாரிகள் மறுக்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டு காலத்தில் சட்டம் எந்த லட்சணத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட விபரங்கள் அம்பலப்படுத்துகிறது.இச்சட்டப்படி 2014 ஏப்ரல் 30வரை உரிமை கோரி வரப் பெற்ற மனுக்கள் 37,61,250 இந்த மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு பட்டா மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டது 14, 35, 113 மட்டுமே. பெரும் பகுதியான மனுக்கள் தகுதியற்றது எனக்கூறி அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் அமல்படுத்தப் படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்! ஆம்! சென்னை உயர்நீதி மன்றத் தில் நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டி, சட்டம் அமல்படுததப்படாமலேயே உள்ளது.

வழக்கை விரைந்து முடிக்கவும் அரசு தரப்பில் எந்த முயற்சியும் இல்லை.ஆதிவாசி மக்கள் வன சிறு மகசூல் சேகரிப்பதையும், ஆடுகள் மேய்ப் பதையும், வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். ஒப்பந்தக்காரர்களிடம் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டத்துக்கு விரோதமாக பழங் குடியினர் அல்லாதார் சேகரித்து விற்பனை செய்கின்றனர். போராட்டங்களின் மூலம் சில மலைகளில் ஆதிவாசி மக்கள்சேகரித்து விற்றாலும் அதற்கு கட்டுப்படி யான விலை கிடைப்பதில்லை. மாநில அரசுகள் வன சிறு மகசூல்களுக்கு குறைந்தபட்ச விலை தீர்மானிப்பதுடன், கொள் முதல் செய்வது, சந்தை உத்தரவாதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

பட்டியல்படுத்துதலும்- இனச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளும் :

பழங்குடியினர் பட்டியல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்தப் பிரச்சனைகள் நீடிக்கின்றன. ஒரு மாநிலத்தின் பழங்குடி பட்டியலில் இருப்பவர் வேறொரு மாநிலத்தில் வேறுபட்டியலில் வைக்கப்பட் டுள்ளார். ஒரு மாநிலத்திலேயே ஒரு மாவட்டத்தில் பழங்குடியாக இருப்பவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்றால் ஏற்க மறுக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் நரிக்குறவர், ஈரோடு மாவட்ட மலையாளி குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரி வினர், புலையன் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை 1980 முதல் வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்திய பதிவாளர் துறையும், மத்திய அரசும் சிறுசிறு காரணங்களைக் காட்டி, திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதனால், உண்மையில் பழங்குடியினராக இருந்தும் பழங்குடியினருக்குரிய உரிமை களையும் சலுகைகளையும் பெற முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். பல தலைமுறைகள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை இழந்துள்ளனர். எனவே, மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் குறித்த பிரச்சனை யைக் கவனிப்பதற்கென்று தேசிய அள வில் தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.மற்றொன்று, ஏற்கனவே பட்டியலில் உள்ள பழங்குடியினர் சான்றிதழ் பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காலங் கடத்துவது, மனுக்களை திருப்பி அனுப்புவது, வருடக்கணக்கில் அலைய விடுவது போன்ற தந்திரங்களைக் கையாளுகின்றனர்.

பழங்குடி சான்றிதழ் கோருபவர்கள் அனைவருமே போலிகள்என்ற முறையில் இந்தப் பிரச்சனைஅணுகப்படுவதே அடிப்படைப்பிரச்சனை. இந்த சோதனைகளையெல் லாம் கடந்து சான்றிதழ் பெற்று அரசுப்பணியில் அமர்ந்துவிட்டால் மெய்த் தன்மைஅறிதல் என்ற பெயரில் வாழ்நாள் முழு வதும் விசாரணையை எதிர்கொள்வதுடன், அவமானத்துக்கும் உள்ளாக நேரிடுகிறது. ‘ஏன் பழங்குடி சமூகத்தில் பிறந்தோம்’என்றே நோகின்றனர்.

எனவே, சான்றிதழ் பெறும் வழி முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். மானிடவியல் பயின்றவர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்துவது குறித்து அரசு யோசிக்க வேண்டும். 2014 மார்ச் மாதம் வரை சுமார் 2,00,000 சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள அனைத்து பழங்குடியினருக்கும் குறிப் பிட்ட காலவரையறை தீர்மானித்து சான் றிதழ் வழங்க வேண்டும்.

 

அரசின் நிதி ஒதுக்கீடுகளும் – திட்டங்களும்:

அரசியல் சாசனத்தில் குறிப்பிட் டுள்ளபடி “பழங்குடிகளின் நலுனுக் கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்“ என்ற கடமை யை நிறைவேற்றும் வகையில் 1979ம் ஆண்டு சிறப்பு உட்கூறு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு 2007ம் ஆண்டு “பழங்குடியினர் துணைத் திட்டம்” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மக்கள் தொகை சதவீதத்திற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. வலுவான போராட்டங்கள், தொடர் வற்புறுத்தல் களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிதி முழுமையாக செலவழிக்கப்படாமல் வேறு பணிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.

திட்டங்களும் அதிகாரிகளின் அக்கறை யின்மை, முறைகேடு, ஊழல் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் மக்களி டையே கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.ஆதிவாசி மக்கள் இன குழுக்களின் எண்ணிக்கையை விட அவர்களுக்கான பிரச்சனைகள் அதிகம் என்பதை அனைவரும் அறிவர். ஒரு சில முக்கிய பிரச்சனைகள் மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை, பசி, நிலமின்மை, கல்வியின்மை, வேலையின்மை, உரிமை யற்றவர்கள் ஆகியவற்றின் மொத்த உருவமாகவும், இதில் முதலிடத்திலும் ஆதிவாசிகள் இருந்து வருகின்றனர். எனவே, ஆதிவாசி மக்களை விழிப்படையச் செய் வோம். அவர்களுக்கு `உணர்த்துவதே’ அடிப்படை பணி. அவர்களைக் காணும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாமல் நம்மால் ஆனதைச் செய்வோம்!

 

 

 

நிறைவு…….. 

 

 

நன்றி : பெ.சண்முகம் | இன்று ஒரு தகவல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்