Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்!

52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்!

1 minutes read

கேரள மாநிலம், கோட்டயம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் உள்ளது.

எனினும், விவசாயி தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டிக் பாம்புகள் ஊர்ந்து சென்றன. இதனை பார்த்த விவசாயி, அந்தப் பாம்புகள் செல்லும் இடத்தை நோக்கிப் பின்தொடர்ந்து சென்றார்.

அப்போது அவை அவரது மாட்டுத் தொழுவத்துக்குள் சென்று, மண்ணுக்குள் பதுங்கியது. இதையடுத்து தொழுவத்தில் அவர் சோதனை செய்தார்.

அங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட குட்டிப் பாம்புகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கோட்டயம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது மாட்டுத் தொழுவத்தில் தோண்டிப் பார்த்தனர். அதில் சில பாம்புகள் மட்டுமே பிடிபட்டன.

அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்தனர். அப்போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது. மேலும், அங்கு இருந்த குட்டிப் பாம்புகள், ராஜநாகத்தின் குட்டிகள் என்பது தெரியவந்தது.

பெரிய ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பதுங்கியிருந்தன. அவற்றில் 47 குட்டிகள் உயிருடனும், 5 குட்டிகள் இறந்த நிலையிலும் இருந்தன. இதைத் தொடர்ந்து பாம்புகளை வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More