செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள்.

1 minutes read

குதிரை மலை கடற்பகுதிக்கு அப்பால் ஒரு தொகை தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை  (29ம்  திகதி ) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 41 தங்க பிஸ்கட்டுகள் கைபற்றப்பட்டுள்ளதுடன் அதற்கும் மேலதிகமாக கடத்திய 4 கிலோ 200 கிராம் தங்கத்தையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30, 35, 36 மற்றும் 50 வயதுகளை உடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சின்னப்பாடு சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More