Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா பாலஸ்தீன பிரதமர் திடீர் இராஜினாமா!

பாலஸ்தீன பிரதமர் திடீர் இராஜினாமா!

0 minutes read

பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே, தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை, பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாசிடம் அவர் கையளித்துள்ளார்.

இஸ்ரேல் இராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், முகமது ஷ்டய்யேயின் இராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், அவற்றுக்கு பதிலளித்துள்ள முகமது ஷ்டய்யே, “காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்துள்ளேன். காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு, புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார் எனத் தெரியவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More