முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாத காலம் பிணை வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 6 மாதங்கள் பிணை வழங்குமாறு கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவரது மகளின் திருமணத்திற்காக பிணை வழங்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனுமீதான விசாரணை (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஊடகங்களை சந்திக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஒரு மாத காலம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.