Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

0 minutes read

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94 இலட்சத்து 99 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 95 இலட்சத்து 33 ஆயிரத்து 471 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 4 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 498 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 38 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More