Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

1 minutes read

தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது. ஆட்சிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இதனால் அ.தி.மு.க அரசு தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. ஆட்சி அமைக்கும் புதிய அரசு வரும் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்.

ஆட்சிக் காலத்தின் கடைசி கூட்டத் தொடா் என்பதால் அதில் மக்களைக் கவரும் வகையிலான புதிய அறிவிப்புகள் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் பேரவை விதி 110-யின் கீழ் முதல்வா் பழனிசாமியும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாா்கள் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 2021-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் திகதி ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து திகதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More