திருவனந்தபுரம்: கேரளாவில் 3 இடங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2 இடங்களிலும், கோட்டயத்தில் பாம்பாடி உள்பட அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நேற்று முன்தினம் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இடுக்கி, ஆலடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.45 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதேபோல கோட்டயத்தில் 1.20 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வு 2, 3 விநாடிகள் தொடர்ந்தன.நில அதிர்வால் வீடுகள், பொருட்கள் அசைவதை கண்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். பொது மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை