Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு டுபாய்க்கு செல்ல தடை!

இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு டுபாய்க்கு செல்ல தடை!

1 minutes read

இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது, ‘நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக ஏப்ரல் 24 முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கொவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More