செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக இங்கிலாந்துடன் கலந்துரையாடல்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக இங்கிலாந்துடன் கலந்துரையாடல்.

1 minutes read

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இந்த சந்திப்பை அடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் கரேத் பேய்லி சந்தித்து பேசினார்.

இதன்போது பாதுகாப்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகள் குறித்தும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More