செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ள கருத்து!

உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ள கருத்து!

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி, இயல்பு வாழ்க்கையினை கொண்டு செல்வதே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் அடக்கம் செய்வதற்குத் தேவையான நடைமுறைகள் குறித்து, பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More