செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துறைமுக நகர் மூலம் இலங்கை மக்கள் டொலரில் சம்பாதிக்கலாம்!

துறைமுக நகர் மூலம் இலங்கை மக்கள் டொலரில் சம்பாதிக்கலாம்!

1 minutes read

துறைமுக நகரத்தின் ஊடாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பல தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அந்தவகையில் எதிர்வரும் 5 வருடங்களில் 15 பில்லியன் டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் 200,000 வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த 5 வருடங்களில் 83 ஆயிரம் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் துறைமுக நகரத்தில் பணிபுரிந்து டொலரில் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல துறைமுக ஆணைக்குழுவினால் நிதி மோசடி இடம்பெறாது என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார்.

ஆகவே நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More