செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி அளவீடு!

மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி அளவீடு!

1 minutes read

யாழ்., ஊர்காவற்றுறை – தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்குக் காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.

தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக அமைக்க காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாரந்தனை வடக்கு ஜே/56 தம்பாட்டியில் உள்ள இறங்குதுறையில் அமைக்கப்ட்டுள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கும் நோக்கில் குறித்த இரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் புகைப்படம் எடுத்ததை அவதானிக்க முடிந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More