செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமணமான யுவதி சடலமாக மீட்பு! – களுத்துறையில் மீண்டும் பரபரப்பு

திருமணமான யுவதி சடலமாக மீட்பு! – களுத்துறையில் மீண்டும் பரபரப்பு

0 minutes read

களுத்துறையில் வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய திருமணமான யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவன் பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற போது சமயலறையில் மனைவி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக இங்கிரிய பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. பொலிஸார் பல கோணங்களில் விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More