செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெட்டுக்காயங்களுடன் ஓட்டோவுக்குள் ஆணின் சடலம்!- கொழும்பில் பரபரப்பு 

வெட்டுக்காயங்களுடன் ஓட்டோவுக்குள் ஆணின் சடலம்!- கொழும்பில் பரபரப்பு 

1 minutes read

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவுக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்குக் கிடைத்த தகவலின்படி, குருந்துவத்தை பொலிஸாரால் வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டோவில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினர் நடத்திய சோதனையில் மித்தெனிய பிரதேசத்தில் வசிப்பவருக்கு குறித்த ஓட்டோ சொந்தமானது எனவும், படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார எனவும் தெரியவந்தது.

விசாரணையில் மேற்படி ஓட்டோ உரிமையாளர் ஓட்டோவைத் தனது மைத்துனருக்கு வாடகைக்குச் செலுத்தக் கொடுத்தார் என்று தெரியவந்தது.

சடலமாக மீட்கப்பட்டவர் பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு இரவில் வாடகை ஓட்டோ  ஓட்டுநராக இருந்தார் எனவும், அத்துருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் அவர் தங்கியிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் கொலை செய்யப்பட்ட நபரின் மார்பிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் காணப்படுகின்றன எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஓட்டோவின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்றும் உடைந்து கிடந்ததும், பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் கிடந்ததாலும் பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனினும், கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. இந்நிலையில், அப்பகுதியிலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களைப் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More