Monday, September 23, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுர குமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு | மன்னாரில் வெற்றிக்கொண்டாட்டம்

அநுர குமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு | மன்னாரில் வெற்றிக்கொண்டாட்டம்

1 minutes read

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், மன்னாரில் இன்று திங்கட்கிழமை (23) காலை 11.30 மணியளவில் ஆதரவாளர்களினால் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பஜார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) மன்னார் மாவட்ட கிளையினால் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது பொங்கல் பொங்கி மக்களுக்கு வழங்கப்பட்டு தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடினர்.

இதன்போது அவர் வாக்குறுதி வழங்கிய மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

குறித்த நிகழ்வில் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More