இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினவிழாவின் துவக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேற்படி விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் “அம்ரித் மகோத்சவ்” என்ற பெயரில் கொண்டாடப்படவுள்ளது. 75-வது சுதந்திர தினம் 2022ல் கொண்டாடப்பட உள்ளது.
நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதைத் தவிர சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு 21 நாட்கள் நடை பயண இயக்கத்தையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கிறார்.