இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமுலாக்கப்பட உள்ள நிலையில் அச்சட்டம் தொடர்பில் பெரும் எதிர்ப்பை முஸ்லிம் அமைப்புகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு சார்பிலும் பெரிய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்திய சட்ட ஆணையகத்தின் தலைவர் நீதியரசர் ரதுராஜ் அவசதிக்காவிற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் ucc அமுல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளார்
மேலும் அவர் பன்முக கலாச்சாரத்தை கொண்ட இந்தியாவில் ucc (uniform civil code ) நடைமுறைப்படுத்தலுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளை எடுத்துக்காட்டியும் அதிலும் முதன்மையாக 25 ஆம் சட்டப்பிரிவை எடுத்து காட்டியும் மத ஒப்புதல் இல்லாமல் ஒரு புதிய சட்டத்தை அமுல் படுத்த முடியாது என்று தெளிவாக கூறினார்.அத்துடன் ucc தமிழகம் முற்றிலுமாக எதிர்க்கின்றது என்றார்.