செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது ஜெர்மனி

அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது ஜெர்மனி

1 minutes read

கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

அந்த வகையில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஜெர்மனியில் வசித்து வருகின்ற நிலையில், அதிக அகதிகளை கொண்ட நாடுகளில் ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது.

இதனிடையே, ஜெர்மனியின் சொலிங்ஜென் நகரில் கடந்த சில நாட்களுக்குமுன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜெர்மனியில் அகதியாக வசித்து வந்த சிரியாவை சேர்ந்த இளைஞர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் அந்த இளைஞரை கடந்த ஆண்டே பல்கேரியாவுக்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டிருந்த போதும், அந்த இளைஞர் தலைமறைவாக இருந்துள்ளார்.

அகதிகளாக வசித்து வரும் நபர்கள் ஜெர்மனியில் கத்திக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் குற்றப்பின்னணி கொண்ட அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை முன்னெக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட ஆப்கானியர்கள் நேற்று தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆனால், எத்தனைபேர் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More