செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுர ஜனாதிபதியாக வந்தமையாலேயே வடக்கு ஆளுநர் பதவியை ஏற்றேன்! – வேதநாயகன் தெரிவிப்பு

அநுர ஜனாதிபதியாக வந்தமையாலேயே வடக்கு ஆளுநர் பதவியை ஏற்றேன்! – வேதநாயகன் தெரிவிப்பு

1 minutes read

“ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்குப் புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயலாகும். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.”

– இவ்வாறு புதிய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநராக இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேதநாயகன், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதி, நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்குரிய ஒருவர் என்பதைத் தெரிவிக்கின்றேன். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்தப் பதவி எனக்குக் கிடைத்திருக்கவும் மாட்டாது. வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக்கொண்டிருக்கவும் மாட்டேன்.” – என்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More