அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றின்போது அமெரிக்காவை தள மாகக் கொண்ட பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்காட்டியும், போராளிகளை ஆதரித்துப் பேசியும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்கில இணையத்தளமொன்று தெரி வித்துள்ளது.
போர்க்குணம்மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபிரிக்கத்துவம் ஆகிய இரண்டையும் கருத்தூன்றி வெளிப்படுத்தும் சமூகம்சார் இசைக் காவியங்களுடன் எதிரெதிரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்பெற்றுள்ள “டெட்பிரெஸ்” எனும் பிரபல அமெரிக்க பின்புல இசைக்குழுவின் கலைஞர்களே இவ்வாறு சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் புதுவருடதின கொண்டாட்ட கலை நிகழ்வொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் தனது உடலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியால் போர்த்தியிருந்த அதேசமயம் அவர்களிருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரப்பிரதாபங்களை புகழ்ந்து பேச ஆரம்பித்தனர். அதன்பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைக்கும் தைரியமூட்டும் வகையில் பார்வையாளர்களை கரகோஷம் செய்யுமாறு அவர்களில் ஒருவர் கேட்டதுடன், அதன்பின்னர் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார். அதனையடுத்து, இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து உரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் விடுதலைக்கான போராட்டம் தொடருமெனவும் குறிப்பிட்டார்.