இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவிக்கையில் “நாங்கள் 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளோம். ஆரம்பகட்டத்தில் தடுப்பூசியை வெளியிடுவது வினியோகிக்கும் பணிகள் மந்தமாக நடைபெறலாம் என்றும் விரைவில் அவை முறைப்படுத்தப்பட்டுவிடும்.
அடுத்த மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டுப்பட்டு உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விரைவில் இங்கிலாந்தில் ஒப்புதல் கிடைத்துவிடும் இந்தியாவிலும் அடுத்த மாதத்தில் அங்கீகாரம் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக “கோவிஷீல்டு” தடுப்பூசியை உருவாக்கி வந்தது.
தங்களின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.