யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனின் நடவடிக்கைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவதானிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள ராதிகா சிற்சபேசன் யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அக்கட்சி சார்பிலான முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் இடம்பெயர்ந்து தற்பொழுதும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்ற மக்களுடனும் மீள்குடியமர்ந்த மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.