Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்

ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்

1 minutes read

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள கனடா நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ராதிகா சிற்­ச­பே­சனின் நட­வ­டிக்­கை­களை குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் அவ­தா­னிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றமை தெரி­ய­வந்­துள்­ளது.

நேற்று முன்­தினம் யாழ்.குடா­நாட்­டிற்கு விஜயம் செய்­துள்ள ராதிகா சிற்­ச­பேசன் யாழில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அக்­கட்சி சார்­பி­லான முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­துடன் இடம்­பெ­யர்ந்து தற்­பொ­ழுதும் இடைத்­தங்கல் முகாம்­களில் வாழ்­கின்ற மக்­க­ளு­டனும் மீள்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து இவர் நேற்றும் இன்றும் வன்­னிக்கு விஜயம் செய்து கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் மக்­க­ளையும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­திப்பார் எனத் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
இதற்­க­மைய அவர் நேற்­றைய தினம் கிளி­நொச்­சிக்கு விஜயம் செய்வார் என்ற எதிர்­பார்ப்பில் அங்கு காத்­தி­ருந்த இலங்­கையின் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யான ரண­வீர என்­பவர் மூன்று பெண் பொலி­ஸாரின் உத­வி­யுடன் தேடு­தல்­களை நடத்­தி­யுள்ளார்.
இதன் தொடர்ச்­சி­யாக கிளி­நொச்­சி­யி­லுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அலு­வ­ல­கத்­திற்கு நண்­பகல் ஒரு மணி­ய­ளவில் சென்று அங்­கி­ருந்­தவர்­க­ளிடம் விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்ளார்.
இவ்­வி­சா­ர­ணை­களின் போது ராதிகா சிற்­ச­பேசன் அங்கு வந்­தாரா எனவும் கிளி­நொச்­சியில் வேறு இடங்­க­ளுக்குச் செல்­ல­வுள்­ளமை தொடர்­பாக அங்­கி­ருந்­த­வர்­க­ளுக்குத் தெரி­யுமா எனவும் விசா­ரித்­துள்­ளனர்.
அப்­பொ­ழுது அந்த அலு­வ­ல­கத்­தி­லி­ருந்­த­வர்கள் ராதிகா சிற்­ச­பே­சனின் விஜயம் மற்றும் அவ­ரு­டைய நகர்­வுகள் தொடர்­பாக தமக்கு எது­வுமே தெரி­யாது எனப் பதி­ல­ளித்­துள்­ள­துடன் வேண்­டு­மாயின் தம்­மு­டைய அலு­வ­ல­கத்­தினை சோத­னை­யி­டு­மாறு கூறி­யுள்ளனர். அப்­பொ­ழுது குறித்த குடி­வ­ரவு குடி­யல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யான ரண­வீர தாம் அக்­கூற்­றினை நம்­பு­வ­தாகத் தெரி­வித்து அங்கு தேடுதல் நடத்தாமல் சென்றுள்ளதாக விடயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதே­வேளை ராதிகா சிற்­ச­பேசன் நேற்று வன்­னிக்கு வருவார் என்ற எதிர்­பார்ப்பில் காத்­தி­ருந்த குடி­வ­ரவு குடி­யல்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் மேலும் பல­ரி­டமும் இர­க­சி­ய­மாக விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More