0
தென்கொரியா இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு 477 பயணிகளுடன் சென்ற செவோல் என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இதுவரை 104 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த மீட்புப் பணியின் போது கப்பலுக்குள் இருந்து மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 194 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது.