செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இத்தாலி பகிரங்க டென்னிஸில் 10ஆவது முறையாக மகுடம்!

இத்தாலி பகிரங்க டென்னிஸில் 10ஆவது முறையாக மகுடம்!

1 minutes read

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை போராடி 7-5 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய ஜோகோவிச், செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்ததால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.

இதில் ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடிய நடால், செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் நடால் வெல்லும் பத்தாவது சம்பியன் பட்டமாகும். முன்னதாக, 2005, 2006, 2007, 2009, 2010, 2012, 2013, 2018, 2019ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More