செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இந்தியாவினை வந்தடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்தியாவினை வந்தடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

1 minutes read

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தநிலையில் பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது.

பார்படோசில் இருந்து ஒருநாள் போட்டி நடைபெறும் இடமான அகமதாபாத்தினை வீரர்கள் வந்தடைந்தனர்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 6ஆம், 9ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் அகமதாபாத்திலும், இருபதுக்கு இருபது போட்டிகள் 16, 18 மற்றும் 20 திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000-வது போட்டியாகும்.

இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைக்கிறது. ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாத னையை படைக்கவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More