இந்தியாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகின்றது.
குறிப்பாக, இந்தியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,542 ஆகக் கொரோனாப் பாதிப்பு உயர்ந்துள்ளது.
அதேசமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது கடந்த சில நாட்களில் கொரோனாவினால் 38 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 531,152 லிருந்து 531,190 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 44,834,859 இல் இருந்து 44,845,401ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.