படகு கவிழ்ந்து நேற்றைய தினம் ஏற்பட்ட விபத்தில் இன்றைய நிலை கவலைக்கிடமாகி உள்ளது. நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே இப் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இதுவரை 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர், குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர்.
படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழந்தது. நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்வது, மோசமான பராமரிப்பு மற்றும் மழைக்காலத்தில் அங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளம் போன்ற காரணங்களால் படகு கவிழும் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது.