செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் அதிகளவான தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல்!

தமிழகத்தில் அதிகளவான தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல்!

1 minutes read

நாடு முழுவதும் 44 இலட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதனையடுத்து, மாநில அளவில் வீணான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 11ஆம் திகதி நிலைவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 10 கோடியே 34 இலட்சம் டோஸ்களில், 44 இலட்சத்து 78 ஆயிரம் டோஸ் மருந்துகள் வீணாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான டோஸ்கள் வீணாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 12.10 சதவீதமும் ஹரியானாவில் 9.74 சதவீதமும் பஞ்சாபில் 8.12 சதவீதமும் மணிப்பூரில் 7.8 சதவீதமும் தெலுங்கானாவில் 7.55 சதவீதமும் தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளன.

குறைவான அளவில் டோஸ்கள் வீணடித்துள்ள மாநிலங்களாக கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் – டையு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவை உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More