செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்திய அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை!

இந்திய அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை!

1 minutes read

தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரச வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஆளுநர் அறிக்கையிலும், தொடர்ந்து மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையிலும் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போரில் உடல் தகுதியை இழந்த இராணுவத்தினர், ஆதரவற்ற கைம்பெண்கள், கலப்புத் திருமணத் தம்பதியர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More