செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியது ஏன்?

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியது ஏன்?

1 minutes read

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க திடீரெனப் பதவி விலகியுள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுர மனதுங்க கடிதம் ஒன்றின் மூலம் தமது பதவி விலகலை அறியப்படுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் காணி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு விகாரை அமைந்துள்ள காணி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அநுர மனதுங்க, குறித்த விகாரை தற்போது 72 ஏக்கர் காணி பரப்பைக் கொண்டுள்ளது. இதனைத் தவிர மேலும் 275 ஏக்கர் பரப்பு நிலம் விகாரை சார்பில் கோரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

எனினும், இதனை மறுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜேத்தவனாராமய, மஹா விகாரை மற்றும் அபயகிரி விகாரை என்பனவற்றை இணைத்துப் பார்த்தாலும் 100 ஏக்கர் காணியே இருக்கும்.

அவ்வாறெனில் குறித்த விகாரைகளை விடவும் அளவில் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு விகாரை பெரியதா? எனக் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், வரலாற்றை நீங்கள் எனக்கு கற்றுத் தருகின்றீர்களா? இல்லை நான் உங்களுக்கு கற்றுத்தர வேண்டுமா? எனவும் ஜனாதிபதி கடுமையாக அநுர மனதுங்கவைச் சாடியிருந்தார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில், இன்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More