0
முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்களால் பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குருந்தூர்மலை பௌத்த விகாரையில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்புக்காகப் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.