செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

1 minutes read

பல பிரதேசங்களில் நேற்று (29) பதிவான நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 வயது மாணவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடக்கு படகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலுள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

கொழும்பு 09, தெமட்டகொடையைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்ததாகவும், அந்தக் குழந்தை பல குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நீராடும்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குழந்தையானது அதன் தந்தையால் ஜா-எல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மாங்குளம் நீர்த்தேக்கத்தில் 5 மாணவர்களுடன் நீராடச் சென்ற மாணவனொருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

காணாமல்போன மாணவர் திருமுறிகண்டி – மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் ஆவார்.

மேலும், வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலான பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் அலையில் அள்ளுண்டு காணாமல்போன நிலையில், நேற்று சனிக்கிழமை (29) இரவு அவரது சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் றம்பொடை, வெதமுல்லவத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More