செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பௌசிக்கு இரு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை!

பௌசிக்கு இரு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை!

0 minutes read

வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கமைய முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பௌசிக்கு 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிக்கு 4 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெதர்லாந்து அரசால் இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஜீப்பை தமது தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தியமை, வாகனத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக 10 இலட்சம் ரூபா அளவிலான தொகையை அமைச்சின் நிதியில் இருந்து செலவிட்டமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சரான ஏ.எச்.எம் பௌஸிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவித்து நீதிபதி இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.

இந்த வழக்கை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More