அமெரிக்க செனட் சபையில் வெளியுறவு துறை பிரிவின் தலைவர் பதவியை வகித்தவர் ராபர்ட் மெனெண்டஸ்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், எகிப்து நாட்டிற்கு உதவும் வகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு ஈடாக தங்கக்கட்டிகள் மற்றும் சொகுசு கார் போன்றவற்றை லஞ்சமாக பெற்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து ராபர்ட், அவரது மனைவி உள்பட 3 பேர் மீது அமெரிக்க பொலிஸார் பண மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, நியூஜெர்சி மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையே ராபர்ட் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் வெளியுறவு துறை பிரிவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.