நடிகர் அஜித் நடித்துள்ள புதிய படம் திரையிடப்படும் திரையரங்குகளில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், நடிகைகள் திரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படம், பிப்ரவரி 5-ந்தேதி, திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள திரையரங்கிற்கு, ஒரு மர்ம மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சென்னையில் வெளியிடப்படும் தியேட்டர்களில் குண்டுகள் வெடிக்கும். எந்த வடிவில் வேண்டுமானாலும் குண்டுகள் வைக்கப்படும். நடிகர் அஜித்குமார் உயிருக்கு ஆபத்து.’ என்று கூறப்பட்டுள்ளது