பா.ஜ.க.வின் ஆட்சி அமைந்தால் தமிழர்களின் கனவு நிச்சயம் நிறைவேறும் என குஜ ராத் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உறுதி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழகத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி, நேற்று மதியம் சென்னை வந்தார்.
ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் 3.12 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு,தமிழக பா.ஜ. நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பளித்தனர்.
அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில் தெரிவித்ததாவது,
டில்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நேரத்தில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் நாங்கள் தமிழர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம் என உறுதி கூறுகிறேன் என தெரிவித்தார்.