துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிந்தனர்.
40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த பஸ், அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் நிலைதடுமாறி வீதியோரம் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதனையடுத்து தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 23 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.