இங்கிலாந்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து தேர்தல் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்த வெற்றியை அடுத்து, புதிய பிரதமராக 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீர் ஸ்டாமர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பதவியை இழக்கிறார்.
மேலும், தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.