அ.தி.மு.க செயற்குழுவின் பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் சென்னைவானகரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
குறித்த கூட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை 8.50 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகிறது.
இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம் மற்றும் வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.
இதுதவிர, சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, தொகுதி பங்கீடு, வேட்பு மனுவில் கையொப்பம் இடுவது ஆகியவை தொடர்பாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.ஸு க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுஅதற்கான சான்றிதழுடன், அரசுஅறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.