வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் 100 பேரை நாட்டுக்குள் அனுமதிக்கும் முன்னோடித் திட்டத்துக்கு தென் கொரிய அரசாங்கம், ஒப்புதல் வழங்கியுள்ளது.
அங்கு குழந்தைப் பிறப்புவிகிதம் கடுமையாகக் குறைந்துவரும் நிலையில், பெண்களை மீண்டும் ஊழியர் அணிக்கு ஈர்க்க அந்த முயற்சி உதவுமென தென் கொரிய அரசாங்கம் நம்புகிறது.
முன்னோடித் திட்டம், வரும் டிசம்பரில் தொடங்குவதுடன், ஆரம்பக்கட்டமாக. பிலிப்பீன்ஸிலிருந்து பணிப்பெண்கள் அங்கு அனுமதிக்கப்படலாம்.
தற்போது, குறிப்பிட்ட வெளிநாட்டவர் மட்டுமே பணிப்பெண்களாக வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் கொரியக் குடிமக்கள் அல்லது பூர்வகுடிக் கொரியர்களின் வாழ்க்கைத்துணையாக இருக்கவேண்டும்.
வரலாற்று ரீதியாகவே, வெளிநாட்டவரை ஏற்றுக்கொள்வதில் தென் கொரியாவில் தயக்கம் நிலவுகிறது. இந்த நிலையில், தென் கொரிய மக்கள்தொகையும் வேகமாக மூப்படைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.