தனித்துவமான கதையின் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘டிடி ரிட்டன்ஸ்’. இதில் சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசும் சங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, மானசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் தீபக் குமார் ஃபதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்கே என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. ரமேஷ் குமார் தயாரித்திருக்கிறார்.
நடிகர் சந்தானம் நடித்திருக்கும் ஹாரர் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பாரிய வெற்றியை தொடர்ந்து பெற்று வருவதால் அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ எனும் திரைப்படத்திற்கும் திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.