தேவையான பொருள்கள்:
பனன்னீர்- 200 கிராம்
பச்சைப்பட்டாணி – 100 கிராம்
முந்திரிபேஸ்ட் – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
வெங்காயம் பேஸ்ட் – 3 ள்ஸ்பூன்
மஞ்சள்பொடி – அரைஸ்பூன்
மிளகாய் பொடி -1 ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் – அரைஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மல்லி இலை – சிறிது
செய்முறை:
பன்னீரை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.மற்ற பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய்விட்டு பன்னீரை பொரித்தெடுக்கவும்.அதே கடாயில் இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,வெங்காயம் பேஸ்ட்,,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பச்சைப்பட்டாணி,உப்பு போட்டு பிரட்டி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்பு முந்திரி பேஸ்ட் சேர்க்கவும்,சிறிது த்ண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் பன்னீர் சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து எண்ணெய் மிதந்துவரும்போது இறக்கவும்.மல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான பன்னீர் மட்டர் மசாலா ரெடி.
நன்றி : தமிழ்க்குறிஞ்சி