தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெல்லத் துருவல் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு – ஒன்றரை டீஸ்பூன்,
உளுந்து,
கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.
செய்முறை
சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள். மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள். சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.
சூப்பரான புளியோதரை தயார்.
நன்றி-தினகரன்