என்னென்ன தேவை?
தேங்காய் எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு,
சீரகம்,
சோம்பு – தலா 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 2,
இடிச்ச பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை,
உப்பு,
கொத்தமல்லி – தேவைக்கு,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
இறால் – 300 கிராம்,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், சோம்பு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் வதக்கி இறால் சேர்த்து நன்றாக வதக்கி தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தூவி இறக்கவும்.
நன்றி-தினகரன்