12
முகத்தில் இருக்கின்ற தேவையில்லாத முடிகளை நீக்குவதற்கு நாம் அடிக்கடி முகத்திற்கு எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு இரண்டையும் கலந்து தேய்த்து வரலாம். இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்தால் முகத்தில் உள்ள முடியின் வளர்ச்சி குறைந்து முகம் அழகாக மாறும்.
மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை நன்றாக வெயிலில் உலர்த்தி காய வைத்து , அதனை அரைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். அதனை ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் வெயிலில் வரும் , வேர்க்குரு வராமல் இருக்கும்.
முகத்தில் உள்ள முகச்சுருக்கத்தை நீக்க தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து உடம்பில் தடவி , சிறு பயத்தமாவை தேய்த்துக் குளிக்க வேண்டும் அவ்வாறு செய்தால் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
மைசூர் பருப்பு 100 கிராம் அளவிற்கு எடுத்து இரவு முழுவதும் பாலில் ஊற வைக்க வேண்டும். அதை அடுத்த நாள் காலையில் அரைத்து விழுதாக்கி முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் ஒரு பொலிவை காணலாம்.
சர்க்கரை சோற்று கற்றாழையின் ஜெல் மற்றும் பால் இம்மூன்றையும் பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் தடவி 20 நிமிடம் தேய்க்க வேண்டும். பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.